Sunday, July 13, 2014


                                    மழை காலம்..!


நீயும் நானும்
மழையில்
நனைந்து
ஈரமானோம்..!
மழை
நம்மில் நனைந்து

நெருப்பானது..!


 
பூமியை நெருங்கும்
மேகக் கயிறுகள்
அறுந்து விழுகின்றன
மழை துளியாய்...

உன்னை நெருங்கும்
என் கவிதை தூரல்கள்
செத்து விழுகின்றன
வெற்று வார்த்தைகளாய்..!









 நீ பிடித்த
குடையில் கருப்பாய் அழுகிறது
உன் மேல் விழாத மழை துளி..!





வா மழையே...
நீயும் நானும் சேர்ந்தே
அழலாம் அவள்
உன்னை மட்டுமல்ல
என்னை கண்டும்
ஒளிந்து கொள்கிறாள்..!




 
எப்பொழுதும் நீ
என் மனதில் இரு...
ஒவ்வொரு மழையின்
போது மட்டும்
என் அருகில் இரு..!





 
நாம்
நடந்து செல்லும்-இந்த
ஒற்றையடி பாதையில்
வேறென்ன வேண்டும் ...
மழையும் ஒரு
குடையும் தவிர..!





நான் மழையாக பெய்கிறேன்...
நீ குடையோடு நிற்கிறாய்...

என் சாரலே போதும்
என் குளுமையை உணர...

நீயோ உன் கண்களால்
எரிக்கிறாய் என் தூரல்களை..!

உன் வெப்பத்தை அணைக்கவே
நான் வருகிறேன்...

நீயோ  நடுங்கும்
உன் விரல்களை
குடைக்குள் மறைத்து
கொள்கிறாய்..!

என்னை என்று
உணர செய்வாய்
ஒவ்வொரு முறையும்
உன் வெப்பம் என் ஈரத்திடம்
தோற்றுப் போனதை..!

No comments: